Wednesday 17 July 2013

அப்பாவிற்கு பின்............gist

அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு...........
அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்!

-------------------------

சாதாரண மனிதன், அசாதாரண மனிதன் ஆகிவிடுகிறான் அரசாங்க வேலை கிடைத்தவுடன்.........

ஓட்டு மூலம் ஆட்சி மாற்றம் செய்யும் அசாதாரண குடிமகன், சாதாரண மனிதன் ஆகிவிடுகிறான், அரசு அலுவலகங்களில்!


-----------------------------
அப்பாக்களால் மட்டுமே மகள்களை மன்னிக்க முடியும்! அம்மாக்களால் மட்டுமே மகன்களை அரவணைக்க முடியும்!
-----------------------------
குடித்து விட்டு, பிரேக் இல்லாமல், பந்தயம் வைத்து, லைசன்ஸ் இல்லாமல், வரைமுறை இல்லாமல், கண்டபடி வாகனம் ஓட்டி, மக்கள் உயிர் எடுக்கும் நல்லவர்கள் பலர் இருப்பதால் தான் என்னவோ, மாண்புமிகு மந்திரிகள் வலம் வருகையில், பாதுகாப்பு கருதி, மக்கள் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன?

# ரியர் வியு கண்ணாடிகள் கூட தலைக்கேசம் சரிப்படுத்த மட்டுமே!


----------------------------------
பணக்கார அல்லது பாசக்கார அப்பாக்கள், விலை உயர்ந்த கார்களை, இரு சக்கர வாகனங்களை, பதினெட்டு வயது நிரம்பாத தன் பிள்ளைகளுக்கு பரிசளித்து, அவர்கள் பந்தயம் வைத்து வேகத்தில் துரத்தி, பிற உயிர்களுடன் விளையாட............

அப்பாக்கள் பிள்ளைகளின் குற்றங்களுக்கு வாரி இறைக்க, அயராது பணம் துரத்திக் கொண்டு இருக்கிறார்கள்!

குருதி மழையில், இடைத் தரகர்களின் காட்டில் பணமழை!
 
 
 

1 comment:

  1. //அப்பாக்களால் மட்டுமே மகள்களை மன்னிக்க முடியும்! அம்மாக்களால் மட்டுமே மகன்களை அரவணைக்க முடியும்!// மனதினை நெகிழ வைத்த வரிகள்!.. வாழ்க!..வளர்க!..

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!